புதன், 22 ஏப்ரல், 2015

நடவுப்பாடல்

More than a Blog Aggregator


நன்னே நன்னே நன்னே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னானே நானே நன்னானே

ஆத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
ஆத்தத் தாண் டி போன மன்னன்
அழச்சா வருவாரோ.... நன்னே...

கொளத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
கொளத்தத் தாண் டி போன மன்னன்
கூப்பிட்டா வருவாரோ.... நன்னே...

அந்திசாய அந்திசாய
அலரியழுதேனே அலரியழுதேனே
அழகான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பொழுது சாய பொழுது சாய
பொலம்பியழுதேனே பொலம்பியழுதேனே
பொன்னான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பாடியவர் : அம்புஜம் , மருங்கூர்
நாள்    : 6.1.2000

புதன், 15 ஏப்ரல், 2015

கும்மிப் பாடல்

More than a Blog Aggregator


காடுவெட்டி கல்பொறுக்கி
காக்கா சோளம் தினை வெரச்சி
மோடு வெட்டி முள்பொறுக்கி
முத்து சோளம் தின வெரச்சி

ஓராந்தான் திங்களிலே
ஓரெலையாந் தின பயிரு
ரெண்டாந்தான் திங்களிலே
ரெண்டெலையாந் தின பயிரு
............. .........................
..............   ......................
...................   ................
....................    ..................

பத்தாந்தான் திங்களிக்கு
பழுத்துவரும் தின பயிரு

.................  ..................
தேனும் தின மாவும்
தித்திக்குது வள்ளியாரே
தண்ணி தவிக்குதடி
தண்ணி கொஞ்சம் தாயேண்ணான்

பாடியவர்: திருமதி அம்புஜம், மருங்கூர்
நாள்: 24.10.1999

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆடு போவும் ஆடு போவும் வழிதனிலே

More than a Blog Aggregator


ஆடு போவும் ஆடு போவும் வழிதனிலே
அரசங்கொத்த அரசங்கொத்த வெட்டி வச்சேன்
வரடியோட வரடியோட அரசுன்னு
வந்த ஆடு வந்த ஆடு தீண்டுலத்த

மாடு போவும் மாடு போவும் வழிதனிலே
மாட்டு தொட்டி மாட்டுதொட்டி கட்டி வச்சேன்
மலடியோட மலடியோட தொட்டியின்னு
வந்த மாடு வந்த மாடு தீண்டுலத்த

நான் மொளவ நல்ல நிறுத்தி வச்சேன் கண்ணகி
நான் மொச பூச செய்துவச்சேன் இப்பவும்
அப்படியும் புள்ள இல்ல கண்ணகி- இந்த
அதிசய ராசா பாணியர்க்கு இப்பவும்

நான் கடுவ நல்ல நிறுத்திவச்சேன் கண்ணகி
நான் கன பூச செய்து வச்சேன் இப்பவும்
அப்படியும் புள்ள இல்ல கண்ணகி- இந்த
அதிசய ராசா பாணியர்க்கு இப்பவும்

குறிப்பு: குழந்தைப் பேறு இல்லாப்பெண்கள் தங்களின் சோகத்தை ஒப்பாரியாகப் பாடும் பாடல்.
பாடியவர்: திருமதி காவேரி , மருங்கூர்


சனி, 20 செப்டம்பர், 2014

ஏற்றப்பாடல்




பிள்ளையாரே... பிள்ளைப்பெருமானே
உன்னைத்தொழுவேனே..
உன்னைத்தொழுவோர்க்கு என்னங்கடையாளம்
சங்கந்திருவாட்சி சாத்துந்தண்டமால
போத்தும் புலி தோலு

பிள்ளையாரை நோக்கி - நாங்க
என்னென்னா படைப்போம் - அவர்க்கு
வேருல பழுத்த வெள்ளரிக்கா நூறு
கோம்புல பழுத்த கொய்யாக்காயும் நூறு

ஆன அடிபோல - பிள்ளையார்க்கு
அப்பளங்கள் கோடி
குதர அடி போல கொழுக்கட்டையும் கோடி

ஓரேனேகல் வேலு 
ஒருபதிகால் ஒன்னு ஒரு பதிகால் ரெண்டு
ஒரு பதிகால் மூனு ஒரு பதிகால் நாலு

ஓரங்கம் ஒரு நாள் - அது
சீரங்கம் திருநாள் - அந்த
சீரங்கத்து தேர - சாமி
சிங்காரிப்பார் யாரோ - அந்த 

ஆசாரி வண்ணான்
அலங்கரிப்பார் தேரை - அந்த
நாட்டாரெல்லாம் கூடி 
நடத்தி வைப்பார் தேரை - அந்த
ஊராரெல்லாம் கூடி
ஓட்டிவைப்பார் தேரை...

(தொடரும்)

செவ்வாய், 15 ஜனவரி, 2013

விடுகதை




1.சந்துல பொந்துல நீ வளந்த
சமுத்தரத்துல நான் பொறந்தன்
ரெண்டுபேர் எழுத்தும்
ஒரே எழுத்து

2.சின்னகுட்டியும்
சின்ன பயலும்
சேந்து கட்டின தாலிய
சீரழிய சிறப்பழிய
சிக்கில்லாம எடுத்தவங்களுக்கு
சின்ன பட்டணம் பாதி

3.கம்மாரம் கருப்பு
சிதம்பரம் சிவப்பு
ஒடச்சா பருப்பு
தின்னா கசப்பு

4. செக்கச் செவேர்னு இருப்பா
செட்டியாரு மொவ
நாள சந்தைக்கு வருவா
வாத்தியாரு மொவ

5. எண்ணெயிலே பொறந்து
எண்ணெயிலே வளந்த
எண்ணெ செக்கான் மொவள
எள்ளுக்கும் சின்ன எல
என்ன எல?








விடை: 1.கத்திரிக்காயும் கருவாடும்,2.குருவிக்கூடு,3.குண்டுமணி(குன்றி மணி),4.மிளகாப்பழம்,5.விடத்தரமிலை

புதன், 23 மே, 2012

ஏரி..





ஏரியின்னா ஏலேலோ பெரிய ஏரி
இருகரையும் ஏலேலோ பொன்னேரி

பொன்னேரி ஏலேலோ கரைதனிலே
போட்டானாம் ஏலேலோ தூண்டிமுள்ளு

தூண்டியின்னா ஏலேலோ தொட பெருமாம்
துள்ளுவாள ஏலேலோ கை பொருமாம்

இடி இடிக்க ஏலேலோ மழபொழிய
இருண்ட வெள்ளம் ஏலேலோ பெரண்டோடும்

பெரண்டோடும் ஏலேலோ வெள்ளத்துல
பெண்களெல்லாம் ஏலேலோ நீர்குளிக்க

நீர்குளிச்சி ஏலேலோ நீராடி
நீல வர்ண ஏலேலோ பொட்டுவச்சி

ஊசி போல ஏலேலோ வாக்கெடுத்து
உன்னிதமா ஏலேலோ பொட்டுவச்சி

கத்திபோல ஏலேலோ வாக்கெடுத்து
கச்சிதமா ஏலேலோ பொட்டுவச்சி

வாளையின்னா ஏலேலோ வளவனூரு
வந்தெறங்கும் ஏலேலோ சின்னகட

கருப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
காஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

காஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
காசாட்டம் ஏலேலோ ஆடையிலே

காசநல்ல ஏலேலோ மறச்சானேதான்
கால்விலங்க ஏலேலோ போட்டானல்லே

சிவப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
செஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

செஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
சீட்டாட்டம் ஏலேலோ ஆடையிலே

சீட்டநல்ல ஏலேலோ மறச்சானேதான்
சிறுவெலங்க ஏலேலோ பொட்டானேதான்

வண்ண வண்ண ஏலேலோ கள்ஞ்செதுக்கி
வாடஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

வாடஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
வல்லாளன ஏலேலோ காணோமேதான்

சின்ன சின்ன ஏலேலோ களஞ்செதுக்கி
சீவஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

சீவஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
சீராளன ஏலேலோ காணோமேதான்

நீலேதான் ஏலேலோ வளையலிட்டு
நெல்லறுக்க ஏலேலோ போற பெண்ணே

நீலேதான் ஏலேலோ வளைய மின்ன
நெல்லறுப்பும் ஏலேலோ சோருதடி

கண்ணாடி ஏலேலோ வளையலிட்டு
கம்பறுக்க ஏலேலோ போற பெண்ணே

கண்ணடி ஏலேலோ வளைய மின்ன
கம்பறுப்பும் ஏலேலோ சோருதடி

பள்ளத்துல ஏலேலோ பயிரழகாம்
பறச்சி பொண்ணே ஏலேலோ நடையழகாம்

சினிமாகொட்டா ஏலேலோ தொறந்திருக்கு
சிவாஜி ஏலேலோ வந்திருக்கார்

சிவாஜி ஏலேலோ அவர்களுக்கு
சிவந்தியப்பூ ஏலேலோ தோரணமாம்
சீப்பி மேல ஏலேலோ ஊர்வலமாம்

அரிசி கட ஏலேலோ தொறந்திருக்கு
அண்ணாதொர ஏலேலோ வந்திருக்கார்

அண்ணதொர ஏலேலோ அவர்களுக்கு
அல்லிப்பூ ஏலேலோ தோரணமாம்
அர்ஜண்டா ஏலேலோ ஊர்கோலமாம்


எண்ண கட ஏலேலோ தொறந்திருக்கு
எம்ஜியாரு ஏலேலோ வந்திருக்கார்

எம்ஜியாரு ஏலேலோ அவர்களுக்கு
மல்லியப்பூ ஏலேலோ தோரணமாம்
மரகதமா ஏலேலோ ஊர்கோலமாம்

கள்ளுகட ஏலேலோ தொறந்திருக்கு
கருணநிதி ஏலேலோ வந்திருக்கார்

கருணாநிதி ஏலேலோ அவர்களுக்கு
கள்ளிப்பூ எலேலோ தொரணமாம்
கழுதமேல ஏலேலோ ஊர்கோலமாம்.

பாடியவர் : திருமதி. அம்புஜம் (60),கல்வி- இரண்டாம் வகுப்பு,சாதி- வண்ணர்,பிறந்த ஊர்- கூத்தக்குடி, விழுப்புரம் மா.வ.,சேகரித்த ஊர்- மருங்கூர், கடலூர் மா.வ.,நாள்- 24/10/1999,சேகரித்தமுறை-ஒலிப்பதிவு, சூழல் -செயற்கைச்சூழல்,பாடலைத் தகவலாள்ளர் கற்ற முறை - 12 வயதில் சகோதரியிடம் கற்றது.

சேகரித்தவர் - முனைவர் இரத்தின புகழேந்தி.
குறிப்பு : இப்பாடல் எளிய மக்களின் அரசியல் பார்வையையும் அது குறித்த அவர்களின் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறப்பாடல்களில் அரசியல் வெளிப்பாடு குறித்து ஆராய்பவர்களுக்கு இப்பாடல் உதவும்.



வியாழன், 19 ஜனவரி, 2012

பல வகை நாட்டுப்புறப் பாடல்கள்


1. தாலாட்டு

ஆராரோ ஆரிரிரோ
ஆரடிச்சா ஏனழுதாய்
அடிச்சவரை சொல்லியழு
ஆக்கினைகள் சொல்லிடுறேன்
தொட்டாரை சொல்லியழு
தொழுவிலங்கு போட்டுடுறென்
அத்தை அடிச்சாளோ
அன்னமிட்ட கையாலே
அண்ணன் அடிச்சானோ
அலீப்பூ தண்டாலே
மாமி அடிச்சாளோ
மருந்து போடும் கையாலே

மாமா அடிச்சானோ
மல்லிகைப்பூ செண்டாலே...

2. விளையாட்டுப் பாடல்

மழவருது மழவருது
நெல்லு அள்ளுங்க

முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்கு சுடுங்க

ஏரு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு வையுங்க..

3. தொழிற் பாடல்

சந்திரரே சூரியரே
சாமி பகவானே
சந்திரர நன் நெனைச்சி
எடுத்தேன் திரு அலவு
எடுத்த திரு அலவு
எழுந்து பயிர் ஏற வேணும்...

4. கொண்டாட்டப்பாடல்

ஒரு தட்டு மண்ணெடுத்து செய்தேனக்கா மூக்குத்தி
மாமாங்கம் பாக்கக்குள்ல தோந்துதக்கா மூக்குத்தி
பார்த்தவங்க லேலே கொடுத்திடுங்க
பசுவித்து லேலே பணமுந்தரேன்
எடுத்தவங்க லேலே கொடுத்திடுங்க
எரும வித்து லேலே பணமுந்தரேன்.

5.  வழிபாட்டுப் பாடல்

ஒரு சொம்பு லே லேலே நீரெடுத்து
ஊத்துங்கடி  லே லேலே பூஞ்செடிக்கு
கிள்ளுங்கடி லே லேலே முல்லரும்ப
சாத்துங்கடி லே லேலே சரஸ்வதிக்கு.